Saturday, September 4, 2010

எங்கே ? எங்கே ?

குருவி கூவுகிற என் குடிலில்
குலவி மகிழும் மரங்கள் !
கூண்டுகள் போலே மாடங்கள் !
மகிழ்வாய் இருக்கிறது மனத்திற்கு !
மழை வரும் போல மேகங்கள் !
மலைகள் தாங்கும் வானம் !
மாலை நேர மந்தாரம் !
மனம் மகிழும் மரக்கோலம் !
காற்றடித்துக் கலைகின்ற வானம் !
நேற்றைய நிலைமை திரும்புமா ?
நிலம் வெடிக்கும் வெக்கை மாறுமா ?
அடுக்கு மாடி 'ஏசி'க்கள் மேலே குயில்கள் !
அலை பாயும் கேபிளில் வரிசையாய் காகங்கள் !
பச்சை மரங்களின் கீழே கார்களின் வரிசை !
காய்ந்து கிடக்கும் ஆற்று வெளியில் குப்பைகள் !
தெப்பம் மறந்த குளத்தில் கிரிக்கெட் !
இன்னும் கொஞ்ச நாளில் இங்கே
இயற்கை எங்கே ? எங்கே ?

செல்வி ஷங்கர்