Thursday, January 3, 2008

ஏன் ??

அழிவு ஒன்று தான் முடிவா ?
ஆற்றல் ஏன் வீணாகிறது ?
நாட்டை ஆள்வது
சுகம் என்றால்
நல்லோர் வாழ்வது சுமையா ?

நடவடிக்கை விரைந்தால்
கடைக்கோடி மனிதனும்
நலம் பெறுவானே!
நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா ?

எங்கே இல்லை
குறைகள் ? எங்கே
இல்லை சுமைகள் ?
களைவதும் சுமப்பதும் சுகந்தானே !

வெற்றிகள் விளைவதில்லை
வேர்கள் பதியவேண்டும் !
குற்றங்கள் குறைய வேண்டும்
குறிக்கோள் உயரவேண்டும் !

5 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

வடுவூர் குமார் said...

கேள்விக்குறியுடன் ஆரம்பித்தது ஆச்சரிய குறியுடன் முடித்திருக்கிறீர்கள்.
இந்த ஆச்சரியங்கள் தொடரும் மனித இனம் இருக்கும் வரை.

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் - ஆச்சரியங்கள் தொடர வேண்டும். அரசியல் வாதிகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

துளசி கோபால் said...

//அரசியல் வாதிகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.//

அரசியல்வாதிகள் மட்டுமில்லைங்க. இந்த அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

செல்விஷங்கர் said...

நன்றி துளசி - வருகைக்கும் கருத்துக்கும்