Thursday, January 8, 2009

மனப்போராட்டம்

எப்படி இருந்த நாடு
ஏன் இப்படி ஆயிற்று ?

இதற்கு யார் காரணம் ?
இப்படியே போனால் இது
எங்கே போய் நிற்கும் ?

போட்டிகளும் போராட்டங்களும்
எதைச் சொல்கின்றன நமக்கு ?

யாரவது தட்டிக்
கேட்க முடிகிறதா ?
கேட்டால் என்னவாகும் ?
எப்படியும் இன்னிலை
மாறுமா ? அப்படிஎன்றால்
அது யாரால் முடியும் ?

மாற்றங்கள் மறுபடியும்
மறுபடியும் வருகின்றன !
ஆனால் மாறுகின்றோமா ?

நினைத்துப் பார்த்தால்
இது எப்படி முடியும் ?
என்று தான் தோன்றுகிறது.

வருங்காலம் நினைக்குமா ?
இல்லை நிகழ்காலம்
நிகழ்த்துமா ? கடந்தகாலங்கள்
நமக்குச் சொல்லிய
பாடம் என்ன ?

படித்தேன் ஒரு கவிஞனின்
கடந்த காலத்தை
அவனும் புலம்போ
புலம்பென்றுதான்
புலம்பி இருக்கிறான் !

அவனுக்கு முந்தைய
கவிஞனின் காலத்தையும்
புரட்டிப் பார்த்தேன் !
அவனும் போராடிப்
போராடி வாழ்நாளின்
பாதியிலேயே பாருலகை
விட்டுப் பறந்து
விட்டான் ! பாருலகம்
பார்த்து வியக்கின்ற
நாட்டிலே நடப்பதுதான்
புரியவில்லை நமக்கு !

பார் போற்றுமா ?
இல்லை பாரதத்தை
பாருயரும் பாதையிலே
பரிதவிக்க விட்டுவிடுமா ?

மனிதனே ! மனிதனே !
மனத்தால் நினை !
தன்னைப் போன்றது
தரணி என்று ! தன்னால்
உயரும் தாய்நாடு !
இதுவும் என் மனப் போராட்டம் !
---------------------------------------------
தினசரி செய்தித்தாள்களைப் பார்க்கும் போது
மனத்தில் ஏற்பட்ட எண்ணம் ........
----------------------------------------------
செல்வி ஷங்கர்

3 comments:

செல்விஷங்கர் said...

மனப் போராட்டம் - விடை கூறுங்களேன்

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாக உள்ளது.......

செல்விஷங்கர் said...

வருகைக்கு நன்றி குணசீலன்