Wednesday, January 28, 2009

வரலாற்றைப் படைத்திடுவோம் !

சுதந்திரம் என்பது என்ன ?
சுற்றித் திரிகின்ற மனம்
நின்று பார்ப்பது தானே !

கேட்பது எல்லாம் கேள்வி
என்றால் விடை அங்கே
விருப்பம் தானே !

ஓடுவதே நதி என்றால்
தேங்குவது ஒரு நாள்
தேடும் நீர் தானோ ?

வீழ்வது அருவி என்றால்
வீழ்ந்தோடும் நீரே
அழகான ஆறாகும்.

நினைப்பது மனமென்றால்
எண்ணங்கள் எங்கு செல்லும் ?
எங்கும் செல்லும் !

இயற்கையை வளமென்றால்
இன்பமெலாம் பரவி நிற்கும்.

பறப்பது நம் கொடி என்றால்
பாரெல்லாம் நாம் உயர்வோம் !

வளர்வது நாமென்றால்
உயர்வதும் நாம் தானே !

நாளும் உழைத்திட்டால்
உண்மை சுதந்திரம்
நமதாகும் .

உயரும் நாட்டை
உயர்த்துவோம் !

உண்மை உழைப்பால்
நன்மைகள் சேர்ப்போம் !
நலம் பல காண
நாளும் உழைப்போம் !

வகுக்கின்ற திட்டங்கள்
வளமாகும் நாட்டில் !

உகுக்கின்ற உழைப்பெல்லாம்
உயர்வாகும் உலகில் !

நித்தம் நினைக்கின்ற
சத்தம் எல்லாம்
சத்தியமாய் சாதிக்கும் !

ஏற்றம் பல காண
ஏங்கும் மக்கள் !
ஒற்றுமையை உணர்கின்ற
காலமன்றோ நாட்டின் வளர்ச்சி !
நம்மை நாம் வகுக்கின்ற
நாட்டத்தில் காண்போம் நாட்டை !

நன்மைகளை உண்மைகளை
உயர்வாகக் கொள்வோம் !
உழைப்பாலே இந்நாட்டை
உயர்த்திடுவோம் !
வருங்காலம் வளமாக
வரலாற்றைப் படைத்திடுவோம் !

செல்வி ஷங்கர்
---------------------

3 comments:

செல்விஷங்கர் said...

வரலாற்றைப் படைக்க வாருங்கள் !!!

தேவன் மாயம் said...

ஏற்றம் பல காண
ஏங்கும் மக்கள் !
ஒற்றுமையை உணர்கின்ற
காலமன்றோ நாட்டின் வளர்ச்சி !
நம்மை நாம் வகுக்கின்ற
நாட்டத்தில் காண்போம் நாட்டை !
////

நல்ல கருத்தான கவிதை!!!
வரலாறு படைத்திடுவோம்!!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன் மயம்