Monday, October 1, 2007

நினைவு

நிலையாய் இல்லாதது

நிலைகளைக் கடந்தது !

காலத்தின் தத்துவம்

காலத்தால் கலைவது!

வளர்ச்சியில் உறைவது!

வாழ்க்கையில் வளர்வது!

எங்கெங்கோ ஓடி

எதையெல்லாம் தேடி

எதிர்பார்ப்பதை நாடி

ஏற்றத் தாழ்வுகளை மோதி

ஏற்பதை எதிர்கொள்வது!

இதற்கெல்லாம் விளக்கங்கள்

விளங்குவதில்லை விடியலில்

மாலைக்குள் மடிவதில்லை!

மறுநாளும் மலர்வது தான்!

No comments: