Monday, October 1, 2007

வசந்தம்

இயற்கையின் இனிமை
இன்பத்தின் தனிமை
காற்றில் கரைந்த சுகந்தம்
ஆற்றில் மலர்ந்த ஆம்பல்
ஏட்டில் படர்ந்த பசுமை
பாட்டில் தவழ்ந்த மழலை
காலங்கள் தந்த கவிதை
பாலங்கள் இணைத்த பான்மை
வாழ்க்கையில் வீசிய தென்றல்
பார்க்கையில் சுவைத்த கன்னல்
வாழ்ந்தவர்க்குக் கடந்த காலம்
வாழ்பவர்க்கு நிகழ் காலம்
வருபவர்களுக்கு எதிர்காலம்
இறைமைக்கு எப்போதும் !!!!


2 comments:

மஞ்சூர் ராசா said...

அருமையான வார்த்தகள்.

வாழ்த்துக்கள்.

செல்விஷங்கர் said...

நன்றி மஞ்சூர் ராசா