Tuesday, December 16, 2008

தென்றல் புயலாய் மாறியதேனோ ??????

மழையில் குடையாய்
வெயிலில் நிழலாய்
நினைவில் நிகழ்வாய்
சோதனையில் வழியாய்
சாதனையில் மகிழ்வாய்
போதனையில் பொறுப்பாய்
பாதையில் பலமாய்
தேவையில் நினைவாய்
செயலில் பொருளாய்
ஆற்றிய கடமை
அருமை மக்களாய்
அவிழரும்பானதே !

மணக்கும் மணத்தை
மலரில் அடக்கிய
மலர்ப்பந்தலாய்
மனத்தை மயக்கிய
மலர்களே !

மாற்றம் ஏனோ ?

மலர்களே ! மலர்களே!

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை !

சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !

செல்வங்களே !!
-----------------------------------------

செல்வி ஷங்கர்




7 comments:

செல்விஷங்கர் said...

தென்றல் புயலாய் மாறியது ஏனோ ! புரிதல் சற்றே குறைந்ததனாலோ !
விடை பகருங்களேன் ..........

தமிழ் மதுரம் said...

சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !
செல்வங்களே !!//

செல்விஷங்கர் said...

வருகைக்கு நன்றி கமல்

ராமலக்ஷ்மி said...

//
சிறியோர் எல்லாம்
சிறியரும் அல்லர் !
பெரியோர் எல்லாம்
பெரியரும் அல்லர் !
செயலால் உயர்க !
செல்வங்களே !!//

மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

நானானி said...

உங்கள் எண்ணங்களில் உதித்த கருத்துக்கள்...ஆதங்கங்கள் சேர்வோரை சென்றடையட்டும்!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி

செல்விஷங்கர் said...

அன்பின் நானாஇ,

வருகைக்கு நன்றி

நீங்கள் ஒருவர் தான் சரியான புரிதலில் - பார்வைக் கண்ணோட்டத்தில் செலுத்தி உள்ளீர்கள்.

செய்தி சென்று சேர்ந்து விட்டது.

இனிய மறு மொழியும் கிடைத்து விட்டது