Wednesday, May 13, 2009

பசங்க - திரைப்பட விமர்சனம்

இன்று பாராளுமன்றத் தேர்தல் - காலை ஓட்டளித்து விட்டு மாலை பசங்க திரைப்படம் சென்றோம்.



பாராட்டுகள் பச்சிளம் குழந்தைகளைப் பாராளவும் செய்யும். எண்ணங்களை நல்வழிப்படுத்துதல் ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. வளரும் உள்ளங்களை வழி காட்டி அழைத்துச் செல்வதைப் போல் உள்ளது "அன்புக்கரசன் IAS - ஜீவா CM - ரேணூகா Doctor" என்று பசங்க சொல்வது.



இயக்குனர் நன்றாகவே சிந்தித்துள்ளார். எண்ணங்களால் ஏணிப்படிகளைத் தொட்டுள்ளார். திரைப்படங்கள் எப்படியோ சென்று கொண்டிருக்கிற காலத்தில் இயல்பான சிந்தனையால் பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கின்றார். சிறுவர்களைச் சீர்திருத்த வேண்டுமல்லவா !



அன்பு -ஆத்திரம் - பண்பு - பாசம் என்ற குடும்பச் சூழலில் குட்டிப் பசங்களை ஒரு நல்ல வழிக்கு அழைத்துச் செல்வது பள்ளியும் வீடும் தான் என்று ஒற்றுமைக்கு நாட்டுப் பற்றை நினைவில் கொண்டு வந்தது நல்ல காட்சி. பார்த்துக் கொண்டிருந்த நானும் சனகனமன என்ற உடன் எழுந்து நிற்கத் துவங்கி விட்டேன் - திரையரங்கினில்.



எண்ணங்கள் செயல்களாக - செயல் எப்போதும் நினைவில் நிற்க வேண்டும் என்பதை அன்பு வழியில் வாழும் காந்தியடிகளை - ஆம் - அப்துல் கலாமை நினைவில் கொண்டு வந்தது பசங்க திரை ஓவியம்.



விட்டுக்கொடுத்தலும் கை தட்டிப் பாராட்டுதலும் ஊக்கமளிக்கின்ற ஆசிரியப் பணி. இறுதியில் ஜீவாவின் மடல் - very sorry - very sorry என்பதனை பல தடவை எழுதி - பந்தயத்தின் தோல்வியினால் இந்திய அஞ்சல் தலை ஐம்பது அனுப்புவது பள்ளிக் குழந்தைகளின் மன நிலையினை அழ்குற எடுத்துக் காட்டுகிறது.


கிராமியச் சூழ்நிலை - கிராமியப் பள்ளி - உயர் பள்ளி - இயல்பாகக் காட்டப் பட்டிருக்கிறது. கெளவி புருசன் - இயல்பான வசனம்.


நல்ல படம் - பார்க்க வேண்டிய படம் - பசங்க பசங்க தான்

செல்வி ஷங்கர்

1 comment:

செல்விஷங்கர் said...

சோதனை மறு மொழி