Tuesday, December 27, 2011

நீரில் பகையும் உண்டோ !

நீரில் பகையும் உண்டோ !
-------------------------------------

விருந்தினன் நட்டான் ஒரு மரம் !
அருந்தி மகிழும் அமுதாய் !
மருந்தின் மிக்க கனிகள்
நாளும் தந்தது நல்லுயிர் வாழ !
நாடும் மக்களும் மகிழ்ந்தனர் !

காலம் சென்றது காற்றாய் !
மரமும் வளர்ந்தது மண்ணில் !
காய்த்துக் குலுங்கிய கிளைகள் !
கனிந்து மணந்த கனிகள் !
சுவைத்து மகிழ்ந்த மக்கள் !

சூறாவளியாய் வந்தது ஒர்புயல் !
சுற்றுச் சூழல் பொங்கி எழுந்தது !
இல்லாததை இருப்பதாய் ஓர் கதை !
கதைக்குக் கண்ணும் காதும் முளைத்தது !
உதைக்கும் கால்கள் ஓடி வந்தன !

நியாயத்தை நீதியை நேர்மையை
எங்கே விற்றனர் மாந்தர் ?
பொய்யை விதைக்க பூகம்பம்
வந்தது ! பூர்வீகம் சொல்லும்
கதைகள் கருத்தை மறைத்தன !

நீரும் நிலமும் இயற்கை !
காற்றும் நெருப்பும் வானும்
வாழும் மக்களும் வையகம் !
பயிரும் உயிரும் வாழ - பாயும்
நீரில் பகையும் உண்டோ ?

----------------------------------------------------------------------
முல்லை பெரியாறு அணையால் எழுந்த எண்ணம் .
----------------------------------------------------------------------

செல்வி ஷங்கர்

2 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

cheena (சீனா) said...

அன்பின் செல்வி ஷங்கர் - சிந்தனை நன்று - கருத்துகள் அருமை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா