Friday, June 14, 2013

வெள்ளை மனத்திற்கு வேர்கள்

வெண் முத்துக்களாய் சிதறுகின்றன 
எங்கெங்கோ செல்லும் மேகங்கள் !

மின்னும் விண்மீன்கள் கதிர்பரப்பும் 
கார்மேகத்தை கண்சிமிட்டி அழைக்கின்றன !

காரிருளில் வானம் ஒளிபரப்பும்
வண்ணக் கோலங்கள் இவை !

வெள்ளை மனமாய் விரிந்து
கிடக்கின்றன சிந்தனைப் பூக்கள் !

சிதறும் மழைத்துளிகள் மண்ணைக் 
காண மறுக்குமா ? கண்ணைக் 
காக்கும் இமையல்லவா நீர்த்துளிகள் !

சிந்தாமல் சிதறாமல் சிறுவிரல்கள் 
அள்ளுகின்ற மணல் பரப்பாய்
எண்ணங்கள் எழுந்தாடும் எங்கும் !

வெட்ட வெளியில் நட்ட மரங்கள்
நாளும் சிந்தும் சிறுபூக்கள் !
வெள்ளை மனத்திற்கு வேர்களாய் !
சிதறுகின்ற பனித்துளியாய் சிந்தனைக்
காற்று ! மனத்தில் மட்டுமல்ல 
மனிதத்திலும் பூத்துக் குலுங்கும், !


கவிதை ஆக்கம் : செல்வி ஷங்கர்
14.06.2013 






8 comments:

செல்விஷங்கர் said...

அன்பின் செல்வி ஷஙகர் - அருமையான சிந்தனை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

பூத்துக் குலுங்கும் வரிகள் பரவசமூட்டியது...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

பூத்துக் குலுங்கும் வரிகள் மனதை பரவசமூட்டியது... வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan said...

'மனிதத்திலும் பூத்துக் குலுங்கும்'
அழகான வரி - இதயத்தை தொட்டது.
பாராட்டுக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறந்த கருத்துக்கள்.... அருமை..

ஸ்ரீராம். said...

அருமை.

ஸ்ரீராம். said...

அருமை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான கவிதை..