வெண் முத்துக்களாய் சிதறுகின்றன
எங்கெங்கோ செல்லும் மேகங்கள் !
மின்னும் விண்மீன்கள் கதிர்பரப்பும்
கார்மேகத்தை கண்சிமிட்டி அழைக்கின்றன !
காரிருளில் வானம் ஒளிபரப்பும்
வண்ணக் கோலங்கள் இவை !
வெள்ளை மனமாய் விரிந்து
கிடக்கின்றன சிந்தனைப் பூக்கள் !
சிதறும் மழைத்துளிகள் மண்ணைக்
காண மறுக்குமா ? கண்ணைக்
காக்கும் இமையல்லவா நீர்த்துளிகள் !
சிந்தாமல் சிதறாமல் சிறுவிரல்கள்
அள்ளுகின்ற மணல் பரப்பாய்
எண்ணங்கள் எழுந்தாடும் எங்கும் !
வெட்ட வெளியில் நட்ட மரங்கள்
நாளும் சிந்தும் சிறுபூக்கள் !
வெள்ளை மனத்திற்கு வேர்களாய் !
சிதறுகின்ற பனித்துளியாய் சிந்தனைக்
காற்று ! மனத்தில் மட்டுமல்ல
மனிதத்திலும் பூத்துக் குலுங்கும், !
கவிதை ஆக்கம் : செல்வி ஷங்கர்
14.06.2013
Friday, June 14, 2013
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அன்பின் செல்வி ஷஙகர் - அருமையான சிந்தனை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பூத்துக் குலுங்கும் வரிகள் பரவசமூட்டியது...
வாழ்த்துக்கள்...
பூத்துக் குலுங்கும் வரிகள் மனதை பரவசமூட்டியது... வாழ்த்துக்கள்...
'மனிதத்திலும் பூத்துக் குலுங்கும்'
அழகான வரி - இதயத்தை தொட்டது.
பாராட்டுக்கள்!
சிறந்த கருத்துக்கள்.... அருமை..
அருமை.
அருமை.
அருமையான கவிதை..
Post a Comment