Sunday, October 7, 2007

என் மொழி - 1 !!!

நீங்கள் நீங்களாக இருங்கள் !
வேறு யாராகவும் இருக்க வேண்டாம் !

ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையே
இடைவெளி குறைந்தால் உண்மை போய்விடும்.

உரிமை அதிகமாக அதிகமாக ஒழுங்கு கெட்டுவிடும்.

அமைதி ஆயிரம் எண்ணங்களைத் தரும்.

சொல்லில் தடுமாற்றம் இருக்கிறதென்றால் கருத்தில்
முரண்பாடு உள்ளதென்று பொருள்.

கேட்டுப் பெறுவது சிறப்பல்ல-
கேட்காமலே வருவது உயர்வு !

செயல்களைச் செய்யாமல் இருப்பது இயல்பன்று !

எல்லோரும் உன் கருத்தை ஏறகவேண்டும் என எதிர்பார்க்காதே !

அடுத்தவர் கருத்தை எதிர்க்காதே !

காசும் பணமும் காலங் கடந்து வருவதால் பயனில்லை !

அன்பைக் கேட்டுப் பெற முடியாது - கொடுத்துப் பெறலாம்.

பாசம் விலை பேசப்படக்கூடாது !

நமக்காகத்தான் பொருள் - பொருளுக்காக நாமில்லை !

உண்மை உள்ளத்தில் இருக்க வேண்டும் ! உதட்டில் அல்ல !

இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லை!

எல்லாச் செயலுக்கும் ஒரே முயற்சிதான் -
ஏன் வன்சொல் பேச வேண்டும் !

அன்பு எதையும் கேட்பதில்லை !

உண்மை நம்மை உயர்த்துவது !

விளையாட்டிற்குக் கூட பொய் பேசாதெ !

எல்லாவற்றையும் கேட்டுக்கொள் !
எப்போதாவது பேசு !

எதற்கெடுத்தாலும் காரணம் தேடாதே !

எதையும் தள்ளிப் போடாதே ! இயல்பாய் இரு !

எப்படிப் பார்த்தாலும் இங்கே மக்கள் - வேறுபட்டவர்கள்தான் !
உடன்பாடு என்பது உள்ளத்தில் வரவேண்டும் !
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் இன்று என்ன
செய்து கொண்டிருக்கிறோம் ?

நினைத்தது நினைத்தபோதில் கிடைத்தால் அது சொர்க்கம் !
தேவை இல்லாத போது தேவாமிர்தமே கிடைத்தாலும் பயனில்லை !

முரண்பாடு உடையது உலகம் !
உடன்பாடு ஏற்படுவது அரிது !
உழல்வது தான் எளிது !

காலங்கள் கடந்து கொண்டு தான் இருக்கும் !
நாம் நடந்து கொண்டிருக்கும் போது !
நற்பெயர் எடுப்பது என்பது எல்லோராலும்
முடியாது ! அது ஒரு சிலருக்கே வாய்க்கும் !

வாழ்க்கை என்பது வசம் தான் [வசந்தம்]
நாம் வாழ்ந்து பார்த்தால் !

எப்பொழுதுமே கடந்த காலங்கள் மேன்மையாய்
இருக்கின்றன ; நிகழ்காலத்தை மட்டுமே கருத்தில்
கொள்பவர்களுக்கு !

வருவதும் போவதும் தானே வாழ்க்கை !

ஊமை நெஞ்சங்கள் உறங்குவதில்லை !

செல்வி ஷங்கர்

3 comments:

செல்விஷங்கர் said...

சோதனையோட்டம்

Thekkikattan|தெகா said...

படித்தேன், மிகவும் உண்மையான வரிகளாக இருக்கிறது. ஆனால், மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளப்படுவதுகளில் இந்த உண்மையும் ஒன்று.

நிறைய எழுதுங்கள்!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தெ.கா